Tuesday, January 7, 2014

தமிழ் வாழ்த்து (சந்தப்பாடல்)

தான தனத்தன தான தனத்தன
தன்ன தனத்தனனா- தன


* வானம் பொழிந்திட பூமி நிறைந்திட
   வந்து பிறந்ததுவே- மனம்
   நாளும் இனித்திட கானம் படித்திட
   வெல்லும் செழுந்தமிழே

* கூனல் ஒழிந்திட கோணல் அகன்றிட
   கல்லும் கரைந்திடவே- நலம்
   மேவும் எனத்தமிழ் மேலும் உரைத்திட
   மண்ணும் சிரித்ததுவே

* பாயும் நிலந்தனில் வாழும் உயிர்களும்
   இன்பம் பயின்றிடவே- இனி
   சேயும் மகிழ்ந்திட சீலம் உயிர்த்தது
   செம்மை மலர்ந்திடவே

*எங்கும் முகிழ்த்தது ஈகை நிறைத்தது
   இன்பம் உயர்ந்திடவே- தமிழ்
   எங்கும் செழித்தது சந்தம் கொழித்தது
   வங்கத்தெழும் அலையாய்

******************************************************

1 comment:

  1. கண்ணப்பன்June 8, 2014 at 3:30 AM

    இந்த மாதிரி நல்ல கவிஞர்களை நாடு கண்டு கொள்ளாதா? உங்களுடைய பாடல்கள் தமிழ் நாடு அரசு தன் பாடநூல் பகுதியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்

    ReplyDelete