Friday, December 6, 2013

கடவுள்

இல்லை என்று
பிரச்சாரம் செய்தார்கள்!
இருக்கவேமுடியாது என்று
பட்டி மன்றம் வைத்தார்கள்!
இருந்தால் நிரூபி என்று
வாதாடினார்கள்!
இல்லையென்று தெரிந்தோ,
இருக்குமோவென்று பயந்தோ
கூட்டம் கூடுகிறது கோவில்களில்
விஷேச தினங்களிலும்
சாதாரணநாட்களிலும்!
இருகிறது என்று சொல்வது பற்றியோ
இல்லையென்றுவிவாதிப்பது பற்றியோ
எந்த பிரஞ்ஞையும்
இல்லாமல் இருக்கிறார்கள்
கடவுளர்கள்
*************************************

4 comments:

  1. வணக்கம்
    அருமையாக சொன்னிர்கள் வாழ்த்துக்கள்

    எனது புதிய வலைப்பூவின் ஊடாக கருத்து எழுதுகிறேன்... உங்களை அழைக்கிறது..http://tamilkkavitaikalcom.blogspot.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. இல்லாமல் இருக்கிறார்கள்
    கடவுளர்கள் - அப்ப, நீங்க கடவுள் உண்டுன்னு சொல்றீங்களாக்கும்... இதுக்கு பக்திப் பாட்டே எழுதியிருக்கலாம். அடப் போங்கப்பா... கடவுள் சம்பந்தமான எல்லாம் திரு திரு ன்னு வர்ரது (திருக்கோவில், திருவிழா, திருப்பணி, திருக்குளம், திருநீறு,திருப்படி, திருவிளக்குமாறு...போல) ஏன் தெரியுமிலல... சாமியப் பத்திக் கேட்டா அறிவியல் பூர்வமா பதில் சொல்ல முடியாம திருதிரு ன்னு முழிக்கிறதாலதான்... எப்புடீ,,,,?

    ReplyDelete
  3. ஆக.. அடுத்துவரும் உங்களின் 100ஆவது பதிவுக்கு என் அன்பான வாழ்த்துகள்... வளர்க... வளர்க்க... வாழ்க.

    ReplyDelete