Friday, October 18, 2013

சொல்லாத சொல்

சொல்லும் போது
சொல்ல முடியவில்லை
சொல்லவேண்டியதைப் பற்றி
எண்ணுகிறது மனம்
சொல்லும் போது!
சொல்லி முடித்த பின்
நினைவிற்கு வருகிறது
சொல்ல வேண்டியவைகளும்
சொல்ல மறந்தவைகளும்!
சொல்லாமல் போன செய்திக்காக்
கவலைப்படுவதில்லை
சொல்லை வேண்டியவர் கூட!
சொல்லும் தனித்து விடப்படுகிறது
சொல்லப்படாமலேயே!!
****************************

4 comments:

  1. மறதி தான்...

    ஆனால் நன்மையே...!

    ReplyDelete
  2. நல்லா சொன்னீங்க ... நல்லா இருக்கு .. இன்னும் நிறய கவிதைகளை எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  3. சொல்ல வந்த சொல்லும் மறந்து தான் போச்சு. இருப்பினும் சொல்லை தனிமையில் விட மாட்டேன். முயன்று சொல்லித் தான் விடுவேன் உங்க கவிதை நன்றூங்க சகோதரி என்று.

    ReplyDelete