Sunday, April 24, 2016

இயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்

பிரபாஸ் படத்தின் இசை வெளியீடு ஏப்ரல் 20..

திரை உலகில் கோலோச்சிக்கொண்டிருக்கக் கூடிய மனிதர்கள் எல்லோரும் வந்து வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

கிட்டத்தட்ட 56 தொலைக்காட்சிகளுக்கு மேல் வந்து எங்களை பேட்டி எடுத்து சிறப்பித்தார்கள்..

ராஜாராஜா இயக்குநர்...இப்படத்தின் வசனகர்த்தா இவரைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.

எங்கள் இருவருக்கும் ஒரே வயது

அதனால் இவரைப் பார்த்தே அன்றே என்னை தோழி என்றும் சகோதரி என்றும் சொல்லி விட்டார்.

திரை உலகில் பெண்களுக்கு பயம் என்றெல்லாம் ஒரு மாயை ஏற்படுத்தியது யாரோ.....அக்கருத்தை குப்பைக்குள் தள்ளியவர்.

பழகுவதற்கு மிகவும் எளிய நபர். இனியவர். எல்லோரையும் அரவனைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதே சமயம் தன் உழைப்பு முழுமையாகவில்லை என்றால் மிகச் சரியான நேரத்தில் சரியான நபரிடம் மட்டும் கோபம் கொள்ளும் உள்வியல் அறிந்தவர்.

டப்பிங் தியேட்டரில் யார் யார் எந்த கேரக்டருக்கு பேச முடியும் என்பதை உணர்ந்து அவரவர்களை அழைத்து பேசவைத்தார்.

இன்று பத்ரகாளி பிலிம்ஸ் தனது அனைத்துப் படத்தையும் தமிழகத்தில் இவருடைய ரசி மீடியாவில் மட்டுமெ தன் பணிகளை மேற்கொள்ளும், அந்தளவிற்க்கு தன் பணிகளை மிகவும் சிறப்பாக செய்வதில் சூரர்.

நல்லோர்களுக்கு எல்லாம் நல்லவிதமாக அமையும் என்பது போலவே இவருடைய உதவியாலர் திரு கார்த்தி அவர்கள், அற்புதமாக பணி ஆற்றக்கூடியவர். இவர் நினைத்தனை அவர் செய்யும் அளவுக்கு இருவருக்கும் ஒரு வேதியல் பொருத்தம்.

அதே போல் ஸ்கைரவி சார் பணீகளை நமக்கு நன்கு தெரியும்..எல்லாவற்றௌயும் பார்த்து பார்த்து செய்பவர்.

இசை கோர்ப்பு அன்று ரெக்கார்டிங் தியேட்டரில் திரு செந்தில் குமார் அவர்களின் பணி மிகவும் குறிப்பிடத்தக்கது. ஒரு சின்ன பிசிர் த்ட்டினாலும் தன் கூர் புத்தியால் கண்டுபிடித்ததோடு எந்த இடத்தில் எதனால் ஏற்பட்டது? அதனை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து ஒவ்வொரு வரியையும் ரசித்து கோர்வையாக்கினார். அவரின் ரசனை எங்கள் வார்த்தைகளை பாடல்களாக்கியது என்றே சொல்ல வேண்டும்..

இயக்குநர் ராஜராஜாவைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், ஒரு நல்ல மனிதர் எனக்கு நண்பராகக் கிடைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்..

நட்பு விஷயத்தில் நான் மிகவும் கொடுத்து வைத்தவள் என்றே சொல்ல வேண்டும்

என் பிரியத்திற்குரியவர்கள் எப்போதும் என்னை விட்டு விலகுவதுமில்லை. மாறுவதுமில்லை.

அதற்கு சான்று...ராதா, பிரபா, வானதி, பாத்திமா, கருணாநிதி அண்ணா, ராகவன் டாடி,

ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதில்லை. எப்போதும் பேசிக் கொண்டே இருப்பதும் இல்லை. ஆனால் எங்கள் குடும்பத்தின் நபர்களுக்காக அவரவர்கள் பிரார்த்தனை செய்து கொள்வோம்...

ஆறு மாதம் கழித்துப் பேசினாலும் அதே அன்பு எங்களுக்குள் எப்போதும் ஊற்றெடுக்கும்

அப்படித்தான் என் பிரியத்திற்குரிய அண்ணா திரு கருணாநிதி அவர்கள்...

கல்லூரி காலங்களில் அவர் நிறைய கவியரங்கம் செல்வார். முதுநிலைப் படிப்பில் தங்க மெடல் வாங்கியவர்..அந்த சிறு வயதில் என் அம்மாவிடம் தன் கவிதைகலை அழகாக சப்தமாக, உச்சரிப்பு சுத்தமாக வாசித்துக் காண்பிப்பார்.

இதெல்லாம் விட எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவர்.

யார் யாரிடமோ அவரின் இணைப்பு எண் வாங்கி அண்ணா நான் சென்னைக்கே வந்துவிட்டேன் அண்ணா என்று சொன்னேன்..அதே அன்பு...அதே பிரியம்..என்னடா செல்லம் என்றே எங்கும் அழைப்பவர். திருமணத்திற்கு முன் கவியரங்கம் செல்லும் போது கருணா அண்ணா வந்தால் அம்மா துணைக்கு வருவதில்லை. அதான் அண்ணா வரான்ல என்பார் அந்தளவுக்கு பிரியமானவர். நேயமானவர்.

இன்று பல பாடல் கள் எழுதி இருப்பதோடு பல பேச்சாளர்கள் கவிஞர்கள் தலைவர்கள் எல்லோரும் விரும்பும் ஒரு நபராக இருப்பது புதுகைக்குக் கிடைத்த பெருமை என்றே சொல்ல வேண்டும்

அன்று நாங்கள் பாடல் ஒலிப்பதிவு முடித்து சாலிகிராம் வழியாக வந்த போது ஒரு பெரிய அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் தான் போன ரெனால்ட் டஸ்டர் காரை நிறுத்தி என்னப்பா நன்றாக இருக்கியா? என்று விசாரித்ததோடு தன்னை எனக்கும் அறிமுகம் செய்து கொண்டார்.(அவரைத் தெரியாதோர் யார்)

கவிஞர் வைரமுத்து அவர்கள் அண்ணன் மேல் அன்பும் அக்கறையும் அதிகம் உள்ளவர்..

அப்படிப்பட்ட உயர்ந்த உள்ளங்களோடு எனக்கு திரை உலகம் தன் இரு கைகளை நீட்டி வரவழைத்திருக்கிறது...

கருணா அண்ணா மூலம் தான் எனக்கு இயக்குநர் ராஜராஜ அவர்களின் அறிமுகம் கிடைத்தது..

இந்த நன்றியை அன்பை என்றும் மறவேன்...

நல்ல உள்ளங்களின் துணையோடு இன்னும் நிறைய சாதிப்பேன்...

பின் குறிப்பு...எனது பாடல்கலை ரசித்துப் பாடினார் தம்பி ஜெகதீஷ்

திருமலை சோமு, மீனாட்சி சுந்தரம், அருண்பாரதி இவர்களும் இப்படத்தில் தங்கள் பங்குக்கு அற்புதமான பாடல்கள் தந்துள்ளனர்...அவர்களுக்கும் என் வாழ்த்தும்,,,வணக்கமும் உரியதாகுக





No comments:

Post a Comment