Wednesday, September 30, 2015

வேண்டும்

வேண்டும்.. எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 5 


அஞ்சாத வாழ்க்கையை
  அவனியிலே ஏற்றுமே
    அன்பையே கோர்க்க வேண்டும்

விஞ்சிடும் புகழதும்
  விண்ணிலே ஏறிட
    வீண்ர்கள் மடிய வேண்டும்

மஞ்சமே கொண்டுமே
  மகிழ்வுகள் ஏற்கவே
    மாண்புகள் வாழ வேண்டும்

பஞ்சமே இல்லாத
  பாதையில் வாழவே
    பைந்தமிழ் வாழ்த்த வேண்டும்

நிதியார்ந்த உலகிலே
   நெஞ்சத்தில் சத்தியம்
     நினைவிலே கொள்கை வேண்டும்

கதியற்று நின்றவர்
   கவலையைத் தீர்க்கவே
    கட்டளை ஒன்று வேண்டும்

மதியார்ந்து வாழ்பவர்
   மண்டலம் போற்றவே
     மண்ணிலே உயர்வு வேண்டும்

சதியினை முறித்துமே
   சாதனை செய்திட
     சகலமும் முயல வேண்டும்

***************************************************************





2 comments:

  1. பஞ்சமே இல்லாத
    பாதையில் வாழவே
    பைந்தமிழ் வாழ்த்தும்
    வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete