Tuesday, September 29, 2015

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 4 புதுக்கவிதை

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்
*******************************************


என்ன வளம் இல்லை இங்கே
ஆனாலும்
அயல்நாடு சென்று வந்தால்
அதிகம் மதிப்பு
வீட்டுக்குள் மட்டும் இல்லை
சமூகத்திலும்
மருத்துவம்,கலைகள்,என்று
எல்லாமும் இங்கிருந்து
புறப்பட்டது தான்
யார் கைகளுக்குள் அகப்பட்டு
இப்படிப் போனது தெரியவில்லை
உழவர்கள்
விவசாயம் தவிர்த்து
வேறு என்ன செய்யலாம் என
யோசிக்கிறார்கள்
வங்கிக்கடன் பெறவும்,வேறு பயன்களுக்குமாய்
மாறிப்போனது நிலத்தின் பட்டா ரசீது
நிலங்களோ எப்போதும்
ரியல் எஸ்டேட் காரர்களிடம்
சிக்கிக் கொண்டு சின்னபின்னமாகிக் கிடக்கிறது
களர் நிலங்கள் கிடக்கின்றன்.
யாரும் பார்க்காதவண்ணம்
விளைநிலங்கள் தான்
விற்பனைக்குள் சிக்குகின்றன்.
எதனைக் கொண்டு எதனை மீட்டெடுக்க?
வருங்காலங்களில்
தலைக்கவசம் போல்
காற்றின் கவசம் அணிந்து
செல்ல முடியுமா என்ன??
மீட்டெடுப்போம்
நம் எண்ணங்களை...
விதைத்திடுவோம் உழவின் மேன்மைகளையும்
உழவர்களின் உழைப்பையும்
************************************************

 Image result for வயல் வெளிகள்

No comments:

Post a Comment